புள்ளிப்புள்ளி மானே
துள்ளித்துள்ளி ஓடி வா
அள்ளி இந்தப்புள்ளியை
யார் உனக்குத்தந்தது.
கண்ணிரண்டும் கூர்மை
காதிரண்டும் கேள்மை
பெண்ணினத்தின் சாயல்
தெரியுதுந்தன் வடிவில்.
பென்னம்பெரும் காட்டில்
தன்னந்தனி செல்லுகையில்
உன்னுடலில் முள்ளுகள்
குத்துவதில்லையோ.
No comments:
Post a Comment