''விளையாடிப் பார்! வெற்றியா தோல்வியா என்பது தெரியும்”.

Wednesday, January 30, 2008

என் ஊரில் இருந்து என் நண்பனின் குரல்
எங்களுக்கும் பொங்கல் திருநாளா?

அதிகாலையிலே ஏர் பிடிக்கசென்ற-எங்கள்
அப்பாவை ஏகே பிடித்தவர் என்று
இழுத்து சென்றனராம்
ஈனப்பிறவிகள்-அன்று மாலையிலே
சாலையில் பிணமாகபோட்டனராம்

பாவிகள் பள்ளியிலே போட்டகுண்டால்-எங்கள்
அம்மாவையும் நாம் இழந்தோம்
பாதியிலே படிப்பை நிறுத்தி-எம்மை
பாதுகாத்த அண்ணாவையும் நாம் இழந்தோம்-இப்போ

தங்கவீடுமில்லை தார்றோட்டில் திரிகின்றோம்
உணவுக்காக-என் தங்கை
தவியாய் தவிக்கின்றாள் படிப்பதற்காக!

பொங்கல்திருநாளா? புதுவருடத்திருநாளா?
எங்களுக்கு எதுவுமில்லை-உத்தமரே!
உமக்கு இரக்கமிருந்தால்-எமக்கு
உதவிடுவீர்

No comments: